சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் 132 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் 81 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 6ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேலும் 1700 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. வைரஸ் தொற்று காரணமாக மொத்தம் 7711 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹூபெய் மாகாண அரசு உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக கடந்த செவ்வாயன்று சீன ஜனாதிபதி ஜீ ஜிங்பிங் கூறுகையில், “ கொரோனா வைரஸ் என்னும் “பேய்” கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுவரை காய்ச்சலில் இருந்து மீண்ட 124 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக சீனா தேசிய சுகாதார ஆணையம் நேற்று (30) தெரிவித்துள்ளது.