கனடாவிலிருந்து சீனாவுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் ஏயார் கனடா நிறுவனம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதி வரை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சங்கள் உலகளவில் விமான பயணத்திற்கான தேவையை குறைத்துள்ளதால் உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் சீனாவுக்கான மேலதிக விமானங்களை ரத்துச் செய்யத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், ரொறன்ரோ வன்கூவர் மற்றும் மொன்றியல் ஆகிய இடங்களில் இருந்து ஏயார் கனடா பொதுவாக வாரத்திற்கு 33 விமானங்களை இயக்குகிறது.
தற்போது உயிரைக் கொல்லும் கொரோனா வைரஸின் தாக்கத்தினால், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் செல்லும் அனைத்து விமானங்களையும் இன்றிலிருந்து நிறுத்துவதற்கு ஏயார் கனடா தீர்மானித்துள்ளது.