அமெரிக்க ஜனாதிபதியை கொலை செய்ய போவதாக மிரட்டிய நபர்!

images 1 1
images 1 1

அமெரிக்க ஜனாதிபதியை கொலை செய்யப்போவதாக மிரட்டிய புளோரிடாவை சேர்ந்த நபர் ஒருவர் வெள்ளை மாளிகைக்கு வெளியே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

25 வயதான ரொஜெர்ஹெட்க்பெத் என்பவர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இரகசிய சேவை பிரிவின் காவல்துறை உத்தியோகத்தரிடம் சென்று நான் டொனால்ட்டிரம்பை கொலை செய்வதற்காக வந்திருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

நான் கத்தியால் அவரைகொலை செய்யப்போகின்றேன் எனவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இரகசிய சேவை பிரிவின் காவல்துறை உத்தியோகத்தர் உடனடியாக அவரை மடக்கி பிடித்து கத்தியை பறிமுதல் செய்துள்ளார்.

டிரம்பினை கொலை செய்யப்போவதாக தெரிவித்த குறித்த நபர் மனோநிலை பாதிக்கப்பட்ட மிகவும் ஆபத்தான நபர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் அவரை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.