ரெனெரிஃப்பில் உள்ள விடுதியில் உள்ளவர்கள் வீடு செல்ல முடியாது

9 ad 2
9 ad 2

ரெனெரிஃப்பில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரித்தானியர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என ஜெற் 2 விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெற் 2 விமான நிறுவனத்தில் முற்பதிவு செய்த பயணிகள் மார்ச் 10 வரை பிரித்தானியாவுக்கு பயணிக்கமுடியாது என குறித்த நிறுவனத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு இத்தாலியச் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில், 700 சுற்றுலாப் பயணிகள் ரெனெரிஃப்பில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கு அயர்லாந்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பிரித்தானியாவில் நேற்றையதினம் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

வைரஸ் தீவிரமடைந்தால் மிக நீண்ட காலத்திற்கு பாடசாலைகளை மூடுவதும், மக்கள் ஒன்று கூடுவதைத் தடுப்பதும் அவசியம் என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி தெரிவித்துள்ளார்.