5-ஆவது முறையாக நிரவ் மோடியின் பிணை மனு தள்ளுபடி

9 d
9 d

வங்கி மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி , அவரது உறவினா் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஆனால், அதற்கு முன்பே அவா்கள் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனா். நீரவ் மோடியின் கடன் மோசடி தொடா்பாக சி.பி.ஐ, அமுலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அப்போது அவர் தாக்கல் செய்த பிணை மனு நிராகரிக்கப்பட்டது.

தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளர்.

இந்தியாவில் உள்ள அவா்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.