ஹெலிகாப்டர் விபத்து 7 பேர் காயம்

88 d
88 d

பிலிப்பைன்சில் காவல்துறையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பொலிசார் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் லகுணா மாகாணம் சான் பெட்ரோ நகர் அருகே உள்ள பொலிஸ் மைதானத்தில் இருந்து இன்று காலை காவல்துறைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் அதிகாரிகள் புறப்பட்டனர்.

காவல்துறை தலைவர் ஜெனரல் ஆர்ச்சி கம்போவா, 4 அதிகாரிகள் மற்றும் 2 பைலட்டுகள் என 7 பேர் அதில் பயணித்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. இதனால் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்த ஹெலிகாப்டர், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அப்பகுதியில் உள்ள வீதியில் விழுந்து நொறுங்கியது.

இதில், ஹெலிகாப்டரில் இருந்த 7 பேரும் பலத்த காயமடைந்தனர். அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஒருவருக்கு மட்டும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் மயக்கமடைந்தார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.