கொரோனா கோரத் தாண்டவம் – ஒரே நாளில் 54 பேர் பலி

1 coron
1 coron

ஈரானில் இன்று ஒரே நாளில், கொரோனா வைரஸ் பாதிப்பால் 54 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு இது அதிகமாகும். அந்த நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 291ஆக அதிகரித்துள்ளது.

இந்த தகவலை, அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர், கியானோஷ் ஜஹான்போர், உறுதி செய்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம், ஒரே நாளில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது. உலக அளவில் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடு, சீனா. அதற்கு அடுத்தபடியாக, இத்தாலி, ஈரான்தான் முன்னணியில் உள்ளது.

பொருளாதார தடையால் அவதிப்பட்டு வரும் ஈரானுக்கு, இந்த பாதிப்பு அதிக இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.