கொரோனாவுக்கு விரைவில் தடுப்பு மருந்து !

043
043

கொரோனா வைரஸுக்கு விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்போம் என இஸ்ரேல் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சீனாவையே பேய் போல் ஆட்டுவித்த கொரோனா வைரஸ் தற்போது அன்டார்டிகா தவிர்த்து ஏனைய கண்டங்களில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

இந்த வைரஸ் சீனாவை விட 8 மடங்கு வேகமாக மற்ற நாடுகளில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்திருந்தது.

உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேல், இத்தாலி, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இஸ்ரேல் விஞ்ஞானிகள் கூறுகையில் கொரோனா வைரஸுக்கு முதல் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் இன்னும் சில தினங்களில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும். அது 90 நாட்களில் வெளிசந்தைகளில் கிடைக்கும். கடந்த 4 ஆண்டுகளாக பிரான்சிட்டிஸ் வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து வருகிறோம்.

தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே எங்கள் அடிப்படை நோக்கம். மற்றபடி குறிப்பிட்ட ஒரு வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும் என்பதல்ல.

நாங்கள் கண்டுபிடிக்கும் தடுப்பு மருந்தானது சிமெரிக்கில் கரையக் கூடிய புரதத்தை உருவாக்கி சுரக்கும். இது வைரஸ் ஆன்டிஜெனை மியூகோசல் திசுக்களுக்கு சுய செயல்படுத்தப்பட்ட எண்டோசைட்டோசிஸ் மூலம் அளிக்கிறது. இதனால் உடல் வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகும்.

என்டோசைட்டோசிஸ் என்பது ஒரு செல்லுலார் செயல்முறையாகும். இதில் பொருட்களை உயிரணு சவ்வை சுற்றியுள்ள ஒரு கலத்திற்குள் கொண்டு வரும்.

எல்லாம் நன்றாக போனால் இன்னும் சில வாரங்களில் எங்களிடம் கொரோனா வைரஸை தடுக்க தடுப்பு மருந்து இருக்கும். அந்த தடுப்பு மருந்தை வாய் வழியாக கொடுக்கும் வகையில் கண்டுபிடிக்கவுள்ளோம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.