2019ஆம் ஆண்டின் பிரித்தானிய அழகி பாஷா முகர்ஜி மீண்டும் மருத்துவ பணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவின் கொல்கத்தா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பாஷா முகர்ஜி, 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரித்தானியாவின் அழகியாக தெரிவு செய்யப்பட்டார்.
அழகி பட்டம் வென்றதும், தனது மருத்துவ பணியை துறந்த அவர், தனது அழகி பட்டம் தொடர்பான மற்ற பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இதுகுறித்து பாஷா முகர்ஜி Fox Newsக்கு அளித்த பேட்டியில் “நான் ஆப்பிரிக்கா, துருக்கி மற்றும் முதல் முறையா ஆசிய நாடான இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டேன். எனக்கு மருத்துவ பணியில் முக்கிய இடம் உள்ளது என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து CNN-க்கு பாஷா அளித்தப்பேட்டியில், பிரித்தானியாவில் Pilgrim Hospital மருத்துவமனை நண்பர்கள் மூலம் பிரித்தானியாவின் நிலையை அறிந்து கொண்டேன். எனவே இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டபின் இரண்டு வாரங்கள் தன் வீட்டிலேயே அவர், தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அதன் பின்னரே இதுகுறித்து முடிவு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.