இந்தியா தமிழகத்தில் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் பயம் மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர் அரியலூர் மாவட்டம் அறக்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. வயது (60) இவர் கேரளாவில் கூலிவேலை பார்த்து வந்துள்ளார்.
கேரளாவில் கொரோனா பரவியதை அடுத்து அங்கிருந்து புறப்பட்டு தனது சொந்த ஊரான கடம்பூருக்கு நாராயணசாமி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 6ம் திகதி நாராயணசாமிக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.