உலகை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்றையதினமும் 4897 பேர் தமது உயிர்களை இரையாக்கியுள்ளனர்.
இதிலும் உலக வல்லரசான அமெரிக்காவிலேயே அதிகூடிய இறப்புக்கள் பதிவாகியுள்ளன.அங்கு 1358 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக லண்டனில் 717 பேர் உயிரிழந்துள்ளனர்.இத்தாலியில் 566 பேரும், பிரான்ஸில் 574 பேரும்,ஸ்பெயினில் 419 பேரும் உயிரிழந்துள்ளனர்.அதேவேளை பெல்ஜியத்தில் 303 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் அமெரிக்காவில் புதிதாக 23,144 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு மொத்தமாக 583,444 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
உலகில் இதுவரை 1,917,272 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் 119,567 பேர் உயிரிழந்துள்ளதுடன் 443,861பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.