கொரோனாவிடம் சிக்கிய இந்தியா – 12 ஆயிரத்தை தாண்டிய தொற்றாளர்கள்!

4 7Y
4 7Y

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை (12,380) பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், (414) பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நோயிலிருந்து 1,489 பேர் பூரண குணமடைந்து தங்களுடைய வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில், (941) கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

நேற்று (15) திகதி தகவலின்படி மொத்தம் (274,599) கொவிட்19 வைரஸ் தொற்று மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,242 ஆக அதிகரித்துள்ளதோடு 14 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.