அறிகுறி இல்லாத 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

3 mm
3 mm

சீனாவில் காய்ச்சல்,சளி,தொண்டைப் புண், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறி இல்லாத 27 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால், அறிகுறியற்ற கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 984ஐ எட்டியுள்ளது.

இவர்களுக்கு கொரோனா இருப்பது தெரியாததால், இவர்கள் மூலம் வைரஸ் அதிகளவில் பரவ வாய்ப்புள்ளது.

இந்த அறிகுறியற்ற 27 பேர் தவிர, மேலும் 10 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் 6 பேர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய சீனர்கள், 3 பேர் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தையும், ஒருவர் குவாங்டாங் மாகாணத்தையும் சேர்ந்தவர்கள்.

இதனால், தற்போது சீனாவில் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 82,798 ஆகவும் பலியானோர் எண்ணிக்கை 4,632 ஆகவும் உள்ளது. வெளிநாட்டினர் 37 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.