எல் சால்வடோரில் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்!

88 y6
88 y6

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோர், பொது போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக தொற்று வீதம் அதிகரித்துள்ள நிலையில், இன்று (வியாழக்கிழமை) முதல் பொது போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அந்நாட்டு தீர்மானித்துள்ளது.

அத்துடன், எல் சால்வடோர், கொரோனா வைரஸை சமாளிக்க சில கடினமான நடவடிக்கைகளையும் பின்பற்றவுள்ளது.

எல் சால்வடோரில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு 695பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15பேர் உயிரிழந்துள்ளனர். 245பேர் மீண்டுள்ளனர்.