பாகிஸ்தான் இராணுவத்தை குறிவைத்து குண்டுதாக்குதல்

8 s 2
8 s 2

தெற்கு பலுசிஸ்தானில் நடந்த கண்ணிவெடி குண்டுவெடிப்பில் ஒரு இராணுவ மேஜர் உட்பட 6 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் எல்லையிலிருந்து 14 கிலோமீட்டர் (8.6 மைல்) தொலைவில் உள்ள தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தின் மலைப்பாங்கான மெக்ரான் பிராந்தியத்தில் துணை இராணுவப் படையான ஃபிரான்டியர் படைகள் (எஃப்.சி) சென்ற உளவு வாகனத்தை இந்த குண்டுவெடிப்பு இலக்கு வைத்துள்ளது.

துருப்புக்கள் ரோந்து பணியினை முடித்துக்கொண்டு தளத்திற்கு சென்றுக் கொண்டிருந்தபோது, தொலைதூர கட்டுப்பாட்டு சாதனத்தால் இந்த கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இராணுவ மேஜர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஹபீசாபாத்தில் வசிக்கும் மேஜர் நதீம் அப்பாஸ் பட்டி என இராணுவத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.