மனிதர்களை கடிக்கும் ரத்தம் உரிஞ்சும் பூச்சிகள் ; ரஷ்யாவில் 8215 பேர் பாதிப்பு!!

6 yu
6 yu

ரஷ்யாவில் ரத்தம் உரிஞ்சும் உண்ணிகள்(ஜாம்பி பூச்சிகள்) பெருகி மக்களுக்கு பல நோய்களை விளைவிப்பதால் ரஷ்ய அரசு திணறி வருகிறது.

கொரோனா பாதிப்பே முடியாத சூழலில், தற்போது ரஷ்யாவில் பரிணாம வளர்ச்சியில் ரத்தம் உரிஞ்சும் உண்ணிகள் உருவாகியுள்ளது.

இந்த உண்ணிகள் தற்போது ரஷ்யா, சைபீரியா நாடுகளில் அதிகளவில் இனப்பெருக்கம் செய்து வருகிறது.

இதுவரை சுமார் 8215 பேர் இந்த ரத்தம் உறிஞ்சும் புதுவகை உண்ணிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 2125 பேர் குழந்தைகள் எனவும் ரஷ்ய மருத்துவர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களை கடிக்கும் இந்த உண்ணிகளால் பல நோய்கள் உருவாகுவதாகவும், குறிப்பாக மனித மூளையில் ஒருவித வீக்கதை ஏற்படுத்தும் என்செபாலிடிஸ் – நோய் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் நரம்பு மண்டலம், இதயம் உள்ளிட்டவை கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.

இந்த ரத்தம் உறிஞ்சும் உண்ணிகளால் காயப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் ரஷ்யா மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.

இந்த ரத்தம் உறிஞ்சும் உண்ணிகள் கடிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித சிகிச்சை முறையும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றுக்கே இப்போது வரை மருந்து கண்டறியப்படாத நிலையில், இந்த வகை உண்ணிகளால் ஏற்படும் பாதிப்பைக் கையாள முடியாமல் ரஷ்யா, சைபீரியா நாடுகள் தவித்து வருகின்றனர்.

இப்போதைய சூழலில் இந்த உண்ணிகள் தொடர்பான ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.