கொரோனா பரவலால் பீஜிங்கில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்

i3 23 2
i3 23 2

சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் தலைகாட்ட துவங்கி உள்ளதால் நகரில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

ஜின்ஃபாடி சந்தையை மையப்புள்ளியாக வைத்து பீஜிங்கில் கொரோனா பரவல் துவங்கி உள்ளது. இதுவரை பீஜிங்கில் 106 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

இதையடுத்து நகரின் 22 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பீஜிங்கிலிருந்து சிச்சுவான் மாகாணம் சென்ற ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

இதே போல் மற்ற ஊர்களுக்கும் கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து சேவை முடக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு உள்ளவர்கள் பீஜிங்கை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.