இத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்

1 nu
1 nu

இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்து நேற்று முன் தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இவ் விபத்தில் பலியான ஷர்மிலன் இத்தாலிய பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளதுடன், ஒரு குழந்தையின் தந்தையுமாவார்.
மேலதிக விசாரணைகளை இத்தாலி நாட்டின் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.