பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் வரும் 17-ம் தேதி முதல் 2 நாட்கள் பயணமாக லடாக் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கிழக்கு லடாக் எல்லை பகுதியில் அத்துமீறிய சீன ராணுவம், பேச்சுவார்த்தையை தொடர்ந்து பின்வாங்க தொடங்கியது. இந்நிலையில் 2 நாட்கள் பயணமாக பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் லடாக், ஸ்ரீநகர் பகுதிகளுக்கு செல்கிறார்.
லடாக்கிற்கு 17-ஆம் தேதியும் ஸ்ரீநகர் பகுதிக்கு 18- ஆம் தேதியும் ராஜ்நாத்சிங் செல்கிறார். பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங்குடன் ராணுவ தளபதியும் உடன் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து, லடாக் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ராஜ்நாத்சிங் ஆய்வு செய்ய உள்ளார். லடாக் எல்லையில் சீனாவுடனான மோதல் ஏற்பட்ட நிலையில், ராஜ்நாத் சிங் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.