ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் உள்ள விவசாய பண்ணையில் குண்டுவெடித்து 5 சிறுவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் உள்ள காட்சினா மாகாணத்தில் யம்மாமா என்ற கிராமத்தில் விவசாய பண்ணை ஒன்று உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக பண்ணைக்கு சென்றனர்.
அப்போது சிறுவர்கள் பண்ணையில் உள்ள ஒரு மரத்துக்கு அடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சற்றும் எதிர்பாராத வகையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.இந்த குண்டுவெடிப்பில் சிறுவர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.
மேலும் 6 சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர் அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விவசாய பண்ணையில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.