அழிவின் விளிம்பில் இருக்கும் போலார் பனிக்கரடிகள்!

Small WW1113824
Small WW1113824

காலநிலை மாற்றத்தை சமாளிக்க தேவவையான விடயங்களை  செய்யாவிட்டால், பனிக்கரடிகள் நூற்றாண்டின் இறுதிக்குள் அழிந்துவிடும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்ட்டிக் பனிப்பிரதேசத்தில் வாழ்ந்து வரும் அரிய வகை விலங்குகளில் ஒன்று போலார் பனிக்கரடிகள். இந்த வகை கரடிகளுக்கு மீன்கள் மற்றும் கடல் சிங்கங்கள் முக்கிய உணவாக உள்ளது.

அரிய வகை விலங்கினமான பனிக்கரடி உலக அளவில் மொத்தமாக 26 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மட்டுமே உயிருடன் உள்ளன. இவற்றை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், தற்போது உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பிரதேசங்கள் அனைத்தும் வேகமாக உருகி வருகின்றன.

இதனால் பனிப் பிரதேசங்களில் வாழும் பல்வேறு உயிரினங்கள் அழியும் தறுவாயில் உள்ளன. குறிப்பாக பனிக்கரடி அந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளது.

பனிப்பிரதேசங்கள் வேகமாக உருகி வருவதால் பனிக்கரடிகள் தங்கள் வாழ்விடங்களையும், உணவுகளையும் இழந்து வருகின்றன. மேலும், அவை மனிதர்கள் வாழும் நிலப்பரப்பு நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளன. 

இந்நிலையில், பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் நிலை இப்படியே தொடர்ந்தால் ஆர்ட்டிக் பகுதியில் இருந்து உணவு, தங்குமிடத்திற்காக இடம்பெயர்தலை சந்தித்து வரும் போலார் பனிக்கரடி இனம் 2100 ஆம் ஆண்டில் முழுவதும் அழிந்து விடும் என கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.