தீ விபத்தில் இருந்து தப்பிக்க இரு சிறுவர்கள் கட்டிட்டத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்த சம்பவம் ஒன்று நேற்று (22) நண்பகல் பிரான்சின் வில்லென்யுவ் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கரும் புகையுடன் கூடிய பாரிய அளவுடைய தீ வேகமாக பரவி வந்தது. அதைத் தொடர்ந்து, கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் சிக்கியிருந்த இரு சிறுவர்கள் தீயில் இருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து வெளியே குதித்துள்ளனர்.
கட்டிடத்தின் வெளிப்பகுதியில் சிலர் கூடியிருக்க, அவர்களை நோக்கி அடுத்து அடுத்து இரு சிறுவர்கள் குதிக்கும் காணொளி பெரும் வைரல் ஆகியுள்ளது.
இந்த அசாத்தியமான முடிவு குறித்த இரு சிறுவர்களின் உயிர்களையும் காப்பாற்றியுள்ளது.
இந்த இரு சிறுவர்கள் எவ்வித தீக்காயங்கள் இன்றி தப்பிக்க, 10 பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
பின்னர் கட்டிட்டத்தில் வசித்த அனைவரும் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்படுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அம்மாவட்ட காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.