முதல் முறையாக சீனா ரொபோ வாகனம் ஒன்றை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ளது.
6 சில்லுகள் அடங்கிய ரொபோ வாகனம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தினை அடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் மண்ணின் தன்மையையும் நில அதிர்வுத்தன்மையையும் அவதானிக்கப்படவுள்ளது.
கடந்த வாரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு விண்கலம் ஒன்றை ஏவியமை குறிப்பிடத்தக்கது.