காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளைகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு!

720x450 1
720x450 1

காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளைகள், மற்றும் அரியானாவில் வாங்கப்பட்டதாக கூறப்படும் சொத்துக்கள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி அரியானா மாநிலத்தில் கடந்த 2004 முதல் 2014 வரையான காலப்பகுதியில் காங்கிரஸ் கட்சி முறைக்கேடாக சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்தே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிலம் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் அறக்கட்டளைகள் மற்றும் ராஜுவ் காந்தி பவுண்டேஷன் மூலமாக சட்டவிதிகளை மீறி நன்கொடை பெற்றுக்கொள்ளப்பட்டதாக அமுலாக்கத்துறை விசாரணைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.