ரஃபேல் போர் விமானங்கள் இம்மாத இறுதிக்குள் இந்தியா வந்தடையும்!

720x450 1
720x450 1

பிரான்ஸில் இருந்து கொள்முதல் செய்யப்படவுள்ள ரஃபேல் போர் விமானங்கள் இன்று (திங்கட்கிழமை) இந்தியா புறப்பட்டுள்ளன.

குறித்த விமானங்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஹரியாணா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தை  வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸிடம் இருந்து இந்தியா 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் முதற்கட்டமாகவே மேற்படி 5 விமானங்கள் இந்தியா வரவுள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.