மாடியிலிருந்து குதித்த கொரோனா தொற்றாளர்

images 2 4
images 2 4

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் மனவுளைச்சலால் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.

இவர் வைத்தியசாலையில் இரண்டாவது அடுக்கிலிருந்து பாய்ந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதனால் குறித்த தொற்றாளருக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழுமலை என்ற குறித்த நபர் தன்னால் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் வசிக்க முடியாது எனவும் வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.