கொவிட்-19 காரணமாக நாம் அதிக கரிசனை கொண்டுள்ளோம்-லோர்தர் வீலர்

1584967438 covid 19 2
1584967438 covid 19 2

ஜேர்மனியில் அதிகரித்துவரும் கொவிட்-19 தொற்று காரணமாக நாம் அதிக கரிசனை கொண்டுள்ளதாக அந்த நாட்டு பொது சுகாதார நிறுவனத்தின் தலைவர் லோர்தர் வீலர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் கடந்த வாரம் 3 ஆயிரத்து 611 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், ஜேர்மனியர்கள் அலட்சியமாக உள்ளதாக தெரிவித்துள்ள பொது சுகாதார நிறுவனத்தின் தலைவர், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.