உலகில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 17,184,770 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 669 231 பேராக பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் பிரேசில் நாட்டில் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரத்து 554 பேர் உயிரிழந்துள்ளதுடன், மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 188 பேராக உயர்வடைந்துள்ள அதேவேளை 70 ஆயிரத்து 869 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் பிரேசிலில் கொரோனா தொற்றுக்குள்ளாவர்களின் மொத்த எண்ணிக்கை 2,555,518 பேராக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 418 பேர் உயிரிழந்துள்ளதுடன் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 153,709 பேராக பதிவாகியுள்ளது.
இதனிடையே அமெரிக்காவில் 66 ஆயிரத்து 416 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மொத்த எண்ணிக்கை 4,567,193 பேராக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் புதிய தொற்றாளர்கள் 52429 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதுடன் மொத்த எண்ணிக்கை 1,584,384 பேராக பதிவாகியுள்ளதுடன் 24 மணித்தியாலத்தில் 779 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.