தாக்குதல் நடத்திய அமெரிக்க வாநூர்திகள்

c
c

வடகிழக்கு சிரியாவிற்கு அருகாமையில் உள்ள குருதிஷ்களின் கட்டுப்பாட்டில் உள்ள குவாமிஷ்லி நகரத்தில், இரண்டு அமெரிக்க உலங்கு வாநூர்திகள் இன்று தாக்குல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நகரத்தில் உள்ள இராணுவ காவல்துறை சாவடி ஒன்றை குறிவைத்து மேற்கொண்ட தாக்குதலில் சிப்பாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், மேலும் இரண்டு சிப்பாய்கள் கடும் காயத்திற்கு உள்ளானதாக அரச தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான காவல்துறையின் ஊடாக செல்ல அமெரிக்க ரோந்து பிரிவொன்றுக்கு அனுமதி வழங்க மறுத்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக வட கிழக்கு சிரியாவின் பெரும் பகுதி, அமெரிக்க துருப்பினரின் ஒத்துழைப்புடன் செயல்படும் சிரிய ஜனநாயக ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.