ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பெண்கள் படகு விபத்தில் பலி!

mysteriousdeathofapracticingfemaledoctorinchennai 1
mysteriousdeathofapracticingfemaledoctorinchennai 1

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஏரி ஒன்றில் இடம்பெற்ற படகு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி உட்பட 10 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

கராச்சியில் இருந்து 135 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தட்டா மாவட்டத்தின் கீஞ்சர் ஏரியின் நடுவில் உள்ள கோயிலுக்கு சென்று திரும்பியபோதே, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதிக சுமை மற்றும் பலத்த காற்று காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் மயக்க நிலையில் இருந்த 3 பேரையும் மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.