மகாராஷ்ட்ராவில் உடைந்து வீழ்ந்த ஐந்து மாடி கட்டிடம்!

images 3 3
images 3 3

இந்தியாவின் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் ஐந்து மாடிகளை கொண்ட குடியிருப்பு தொகுதி ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 24 பேர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளனர்.மீட்புப்பணிகளில் மூன்று குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும் அனர்த்தம் நேர்ந்தமைக்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.