கோலி மற்றும் தமன்னாவின் கைது வழக்கில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு

68216137
68216137

இணைய வழி சூதாட்ட விளம்பரங்களில் நடித்த இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யுமாறு கோரி தொடரப்பட்ட வழக்கில், மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இணைய வழி சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சட்டத்தரணி சூரியபிரகாசம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மனுவை நேற்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு உட்படுத்திய நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இணைய சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு, அத்தகைய இணைய வழி சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருந்தார்.