கொரோனாக்கு எதிரான போராட்டங்களுக்கு தடை விதித்தது ஜேர்மனி!

coronavirus blue
coronavirus blue

கொரோனா வைரஸ் நோய்த்தடுப்புக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக வருகின்ற சனிக்கிழமை போராட்டங்கள் நடத்தப் போவதாக சில அமைப்புகள் அறிவித்திருந்தமையை அடுத்து ஜேர்மனி குறித்த போராட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது, கொரோனா தடுப்புக் கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதம் முதலாம் திகதி நடைபெற்ற கொவிட்-19 கட்டுப்பாட்டு எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நடந்துகொண்டதையும் அதிகாரிகள் சுட்டிக் காட்டினர்.

இதேவேளை, பொது இடங்களில் கூடி எதிர்ப்பு தெரிவிக்கும் தங்களது அடிப்படை உரிமை இந்தத் தடை மூலம் பறிக்கப்படுவதாக போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.