பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் இந்தியா!

unnamed
unnamed

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 7 நாட்கள் இந்திய அரசு துக்கம் அனுசரிக்கும் என்றும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 10ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை காலமானார். பிரணாப் மறைவு நாட்டிற்கு பெரும் இழப்பாக அனுசரிக்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் பொறுப்பிலிருந்தவர் என்பதால், அவரின் பிரிவையொட்டி நாட்டில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் எந்தவிதமான கொண்டாட்டங்களும் குறிப்பிட்ட நாட்களில் முன்னெடுக்கப்படாது என்றும் அரசு அறிவித்துள்ளது.