அ.தி.மு.க மீது குற்றம் சுமத்தினர்; தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின்

ssssss
ssssss

அ.தி.மு.க.அரசு நெல்லை மாவட்டத்தில் கொரோன வைரஸினால் பலியானவர்களின் எண்ணிக்கையை மறைக்கின்றது என தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததன் மூலம் குற்றம் சாட்டியுள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

“கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் மட்டும் 182 பேர் இருந்துள்ளதாக அரசு தகவல் வழங்கியுள்ளது ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்படி 285 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 103 உயிரிழப்புகள் மறைக்கப்பட்டுள்ளது என்றும் அ.தி.மு.க.அரசு மரணங்களைக் குறைத்துக்காட்டி மகுடம் சூட்டிக்கொள்ள நினைக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் எனவும் சென்னையில் மறைக்கப்பட்ட மரணங்களுக்கே இன்னும் தெளிவு வரவில்லை அடுத்து நெல்லை அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .