பாகிஸ்தான் புகையிரத தீ விபத்து- 16 பயணிகள் உயிரிழப்பு

pakistan 2
pakistan 2

பாகிஸ்தானில் கராச்சி-ராவல்பிண்டி இடையே புகையிரதம் சென்றுகொண்டிருந்த போது ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்து அருகில் உள்ள பெட்டிக்கும் தீ பரவியது.

இதையடுத்து புகையிரதம் நிறுத்தப்பட்டு தீப்பிடித்த பெட்டிகளிலிருந்த பயணிகள் வெளியேறினர். சிலர் தீயில் சிக்கிக்கொண்டனர். மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தி சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 13 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.