தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளருக்கு கொரோனா !

PREMALATHA
PREMALATHA

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும்,நடிகருமான விஜயகாந்தின் மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த்திற்கு கடந்த 22ம் திகதி கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரேமலதாவுக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.