அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த பத்தாண்டுகளில் வருமான வரியை உரிய முறையில் செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமது தொழில்களில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, கடந்த சில ஆண்டுகளில் அவர் குறைந்த அளவிலேயே வரிகளை செலுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், 2016 ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவர் 750 டொலரை மாத்திரமே வரியாக செலுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த பத்தாண்டுகளில் அவர் வரியை உரிய முறையில் செலுத்தவில்லை என வருமான வரி ஆவணங்களின் அடிப்படையில் தகவல் வெளியாகியுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.