தென்கிழக்கு ஆசிய நாடுகள் உச்சி மாநாடு 14வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி 3 நாள் விஜயத்தினை மேற்கொண்டு தாய்லாந்து சென்றுள்ளார்.
இன்று பிற்பகல் பாங்கொக் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பாங்கொக் தேசிய உள்விளையாட்டரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர், ‘தாய்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் வெளியிட்டார்.
மேலும், குருநானக்கின் 550வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றை வெளியிட்டு உரையாற்றியுள்ளார்.