தமிழகத்தில் நேற்றும் (திங்கட்கிழமை) புதிதாக 5,395 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய தகவலை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 25 ஆயிரத்து 391 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 1,367 பேர் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 62 பேர்உயிரிழந்துள்ளதாகவும் இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,846 ஆக உயர்ந்துள்ளது என்றும் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் 5,572 பேர் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் இதுவரை மொத்தம் 5 இலட்சத்து 69 ஆயிரத்து 664 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.