நாளை மீண்டும் கூடுகின்றது கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு !

1560884704 ty
1560884704 ty

கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளு மன்றக்குழுவானது நாளைய தினம் மீண்டும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் நாடளுமன்றத்தில் நாளை (7) காலை 11 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறவுள்ளது .

இதன் போது புதிய ஊடகப்பேச்சாளர் நியமனம் மற்றும் புதியகொரோட நியமனம் உள்ளிடட பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்க்கான தீர்வும் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதே சமயம் தற்பொழுது கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளராக உள்ள சுமந்திரன் தேர்தல் காலத்தில் நடந்து கொண்ட விதம் தமக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதுடன்இம்முறை தமக்கு ஊடகப்பேச்சாளர் பதவி மற்றும் பிரதான கொரோட பதவி நிலைகளை வழங்க வேண்டும் எனக் கூட்டமைப்பின் பங்களிக் கட்சிகளான தமிழீழ விடுதலைக்கழகம் ( புளொட் ) தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ ) ஆகியகட்சிகள் கூட்டாக வலியுத்தி வந்தநிலையில் இந்த கூடடம் நாளை இடம்பெறவுள்ளது.

அதேசமயம் இதற்க்கு முன்னர் இடம்பெறவிருந்த கூட்டம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் கலந்துகொள்ளாமையினால் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.