ஜப்பானில் எரிமலை வெடிப்பு

japan
japan

ஜப்பானில் சாட்சுமா அயோஜிமா தீவுப் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று வெடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த எரிமலையால் பெரும் சேதங்கள் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் அதிகாரிகள் தரப்பில், “ ஜப்பானின் தென் பகுதியில் உள்ள காகோஷிமா மாகாணத்தில் உள்ள எரிமலை ஒன்று சனிக்கிழமையன்று வெடிக்கத் தொடங்கியது. மாலை சுமார் 5.35 மணியளவில் எரிமலை வெடிக்கத் தொடங்கியதன் காரணமாக அப்பகுதியில் கரும்புகை பரவியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் கடந்த ஆண்டு 250 ஆண்டுகளுக்குப் பின்னர் ’மவுண்ட் லோ’ எரிமலை வெடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் செயல்படும் நிலையில் மொத்தம் 103 எரிமலைகள் உள்ளன.