முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம்!

download 14
download 14

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிட, சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், தமிழக விவசாயிகள் மத்தியிலும் மிகப்பெரிய அதிருப்தி – எதிர்ப்பு அலைகளை உருவாக்கியிருப்பதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்புச் சட்ட பிரிவுகளின்படி பார்த்தால், வேளாண்மையைப் பொறுத்தமட்டில் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே இருப்பதாகவும் இந்த அதிகாரத்திற்குள் நுழைந்து மத்திய அரசு சட்டமியற்றியிருப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது எனவும் மு.க.ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.