இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாகூருக்கு கொரோனா வைரஸ் தொற்று, இன்று (12) உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெய்ராம் தாகூருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டமையை தொடர்ந்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன.
இது தொடர்பாக முதல்மந்திரி ஜெய்ராம் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “கடந்த சில நாட்களுக்கு முன்னர், கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததால் கடந்த ஒரு வாரமாக நான் எனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தேன்.
ஆனால்,கடந்த 2 நாட்களாக எனக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து, இன்று நான் பரிசோதனை செய்துகொண்டேன்.
குறித்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி நான் எனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.