இந்தியாவில் டிரம்பை கடவுளாக வணங்கி வந்தவர் மரணம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 20
625.500.560.350.160.300.053.800.900.160.90 20

இந்தியாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு சிலைவைத்து வணங்கி வந்தவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் சர்வாதிகார நாடாக விளங்கி வருவது அமெரிக்கா. அந்நாட்டின் தலைவராக டொனால்ட் டிரம்ப் இருந்து வருகிறார்.

டிரம்ப் தனக்கென ஒரு புதிய சிந்தனையில் பணிகளை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கூட கொரோனா பற்றி அவர் சொன்ன விடயங்கள் பெரும் பரப்பை ஏற்படுத்தியிருந்தது.

டிரம்ப்க்கு பெரும்பாலும் எதிர்ப்புக்கள் இருந்தாலும் அவருக்கு ஆதரவானவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்தவகையில் தெலங்கானா மாநிலம், ஜனகாம்மா மாவட்டத்தை சேர்ந்த பூஸ்சா கிருஷ்ணா என்ற நபர் தனது வீட்டின் முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு 6 அடி உயரத்தில் சிலை அமைத்து தினந்தோறும் பூஜை செய்து வந்துள்ளார்.

எனது கடவுள் இந்தியாவுக்கு வந்ததால் பெருமைப்படுகிறேன். நான் டிரம்பை கடவுளாக வணங்குகிறேன், விரைவில் அவரை சந்திப்பேன் என்று நம்புகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார் என கடந்த ஆண்டு டிரம்ப் இந்திய வந்த போது புஸ்சா கிருஷ்ணா பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில், மேடக் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது புஸ்சா கிருஷ்ணா நிலை குலைந்த விழுந்துள்ளார்.அவரை மருத்துவமனகை்கு கொண்டு சென்ற போது புஸ்சா கிருஷ்ணா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தாக குடும்பத்தினர் கூறினர்.