இந்திய இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின்34ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று நினைவு கூரப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை பிரம்படி பகுதியில் அமைந்துள்ளகொக்குவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஞாபகார்த்த நினைவுத்தூவியில் இடம் பெற்றது.
நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து ஈகை சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளர் ஜெயகரன், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதேசமயம் அமைதிப்படை என்ற போர்வையில் இலங்கையில் கால் பதித்த இந்திய படை இலங்கையில் மேற்கொண்ட முதலாவது படுகொலை இது என்பதும் குறிப்பிடத்தக்கது .