போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தாக்குதலில் 9 பேர் பலி

mexico
mexico

மெக்சிகோவில் ஆயுதம் ஏந்தி வந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பயணித்துக்கொண்டிருந்த கார்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

துப்பாக்கி தாக்குதலுக்கு இலக்கானவர்களும், தீக்காயங்களுடனும் உயிர் தப்பியவர்களும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியது, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என தெரிய வந்துள்ளது.

தங்கள் போட்டிக் குழுவினர் பயணம் செய்த கார்கள் என்று நினைத்தே, அந்த கார்கள்மீது துப்பாக்கிச்சூட்டை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் துப்பாக்கிச்சூட்டினை நடத்தி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மெக்சிகோ பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.