ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஜேர்மன் ஜனாதிபதி சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் ஜேர்மனில் மொத்தமாக 359,802 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர், இத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி 9,775 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.