தங்கச்சுரங்க ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 37 பேர் பலி

pharkino
pharkino

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ பசோவில் கனடாவிற்கு சொந்தமான தங்கச்சுரங்கத்தில் பணிபுரியும் 100 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயணித்த வாகனத்தின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடாத்தியதில் தங்கச்சுரங்க பணியாளர்கள் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 60இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.