மாணவனால் கொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு நாடாளுமன்றில் அஞ்சலி!

பிரான்ஸ் – பாரிஸில் கொல்லப்பட்ட ஆசிரியருக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாரிஸின் கல்லூரியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய சாமுவேல் பட்டி (Samuel Paty), என்பவர் வகுப்பொன்றில் முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியதால், 18 வயது இஸ்லாமிய இளைஞரால் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து குறித்த இளைஞரை அந் நாட்டு காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். ஆசிரியர் கொலை பிரான்சில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஆசிரியருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.